46. ஸிஞ்சான மணி மஞ்ஜீர மண்டித ஶ்ரீ பதாம்புஜா
ரத்னப் பரல்கள கொண்ட சிலம்புகள அணிஞ்ச பாத கமலங்கள கொண்டவளாக இருக்கிறா அம்பாள். சிலம்புகள ஞானனுபூதியாக உருவகப் படுத்தினா அதுல தோன்றும் ரத்னப் பரல்கள ஞான பூமிகைகளா பார்க்கலாம். இந்த ஞான பூமிகைகள ஏழு விதமா பல்வேறு நூல்ல சொல்லப்படறது. அதுல 1. சுபேச்சா (நல்ல ஆசை) 2 விசாரணை (சுய விசாரணை) 3 தனுமானசி (நுட்பமான மனம்) 4: சத்வபட்டி (ஒளியை அடைதல்) 5 அசம்சக்தி (உள் பற்றின்மை) 6: பதார்த்த பாவனா (ஆன்மீக தரிசனம்) 7: துரியா (உச்ச சுதந்திரம்) இப்படி சில பேர் சொல்றா. எப்படி இருந்தாலும் ஞானத்த அடைய சில படிகள் இருக்குன்னு புரிஞ்சுக்கணும். அதான நம்ம நோக்கம் ?