28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானஸா
மந்தஸ்மிதம்னா மகிழ்ச்சியால விளைந்த புன்னகைன்னு சொல்லலாம். புன்னகையால நம்மோட மனசுக்கு மட்டும் மகிழ்ச்சி ஏற்படல எதுக்க இருக்கறவாளுக்கும் மனசு நெறையரது. இங்க அம்பாள் தன்னொட புன்னகையினால கணவரான காமேசரோட மனச மூழ்க வைக்கராளாம். அப்படிப்பட்ட அம்பாள ஸ்தோத்ரம் பண்றவா மனசும் ஆனந்த வெள்ளத்துல மூழ்கும். அதுவே பேரானந்தம்கர மோக்ஷம்னு சொல்வா ஞானமடைஞ்ச பெரியவா.