30. காமேச பத்த மாங்கல்ய சூத்ர சோபித கந்தரா

பத்தன்னா கட்டியது? காமேச பத்தன்னா காமேசர் கட்டியது. என்ன கட்டினார்? மாங்கல்ய சூத்ரம். யார் கழுத்தில்? காமேசியின் கழுத்தில். அப்படி சூடிய மாங்கல்ய சூத்ரம் கொண்ட அழகான கழுத்த உடையவள்னு சொல்ரா வாக்தேவிகள். 

பெண்கள் எவ்வளவோ நக அணிஞ்சாலும் மாங்கல்ய சூத்ரம்தான் ரொம்ப அழகானதும் சிறப்பானதும் கூட. இந்த சூத்ரம்தான் கணவனோட ஆயுளுக்கு சூத்ரம்னு சொல்லுவா. 

அமுதம் பெற தேவாளும் அசுராளும் பார்கடல கடயரா. அப்போ முதல்ல ஆலகால விஷம் வறது. அத பரமேஸ்வரன் அருந்தி அனைவரையும் காக்கரார். ஆனா அந்த பரமேஸ்வரனையும் விஷத்தால பாதிக்கப்படாம அவர் கழுத்திலேயே நிக்கப் பண்ணினது அம்பாள். அதாவது அவள் கழுத்துல இருக்கற திருமாங்கல்ய சூத்ரம்தான். அதனால அதுதான் அவளுக்கு அழக சேர்க்கர்துன்னு சொல்றது ரொம்ப பொருத்தம்னு தோன்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா