1.ஶ்ரீமாதா
நம்ம பெத்த அம்மா நமக்குத் தெரியும். அப்படி இந்த ஒலகம் முழுக்க ஒரு கொழந்தன்னா அத பெத்தவ ஒருத்தி இருக்கணுமில்லையா. அவளத்தான் ஶ்ரீ மாதா. அதாவது அம்மாவுக்கெல்லாம் அம்மா என்று சொல்லரா வாக்தேவிகள்.
ஶ்ரீ அப்படின்னா அமிர்தம்னு ஒரு பொருள். பரசிவன் விஷத்த சாப்பிட்டும் உயிரோட இருக்கார்னா அதுக்கு அம்பாள்கற அமிர்தம் அவர அப்படி காப்பாத்தி இருக்கு. உயிர கொடுக்கரவதானே அம்மா. அப்படி பெரியவரான பரசிவனோட உயிர காப்பாத்தினவ அந்த அம்பாள். அதனால அவள் பெரிய அம்மா, அதாவது பெரியநாயகித் தாயார். இப்படியும் ஒரு அர்த்தம் சொல்றா பெரியவாளான ஶ்ரீபாஸ்கராசார்யாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக