12. நிஜாருணப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்டமண்டலா
அம்பாளின் நிறம் சிவப்பு. சரியா சொல்லனும்னா அம்பாள் மேனி முழுதும் செம்பஞ்சுக்குழம்பு நிறத்துல இருக்காம். அந்த உடம்பிலிருந்து வெளிப்படும் காந்தி அதாவது ஒளி அனைத்து பிரம்மாண்டங்களயும் மூழ்கடிக்கிரது.
அண்டத்துல உள்ளதுதான் பிண்டத்துலன்னு சொல்லுவா. பிண்டம்னா இந்த ஒடம்பு. அப்ப அம்பாளின் சிவப்பு நிறம் நமது உடம்பையும் மூழ்கடிக்கிரதுன்னு அர்த்தம் ஆரது. நம்ம ஒடம்புக்குள்ள இரத்தம் சேப்பு நிறத்துல மூழ்கி இருக்கு இல்லையா.
இந்த நாமத்த சொல்லி சிவப்பான அம்பாள தியானம் பண்ணினா நமது ஒடம்பும் சிவப்பா ஆகி கடைசில அந்த தேஜசுல கலந்துடும். அதுதான் ஜீவன் முக்தின்கறது.
கருத்துகள்
கருத்துரையிடுக