5. தேவகார்ய ஸமுத்யதா
தேவர்கள் என்ற ஒரு சாரார் நாம் செய்யும் யாகங்கள்ள தரும் அவிசுக்கு மகிழ்ந்து நமக்கும் இந்த ஒலகத்துக்கும் நன்ம பண்றவா. நல்ல எண்ணங்கள கொண்டவா. இதற்கு நேர்மாறா அசுரர்கள் கெட்ட எண்ணங்களை கொண்டவா. சதா இவா ரெண்டு பேருக்கும் சண்ட நடந்துண்டே இருக்கும். இந்த சண்ட நம்ம மனசுலேயும் நல்ல எண்ணங்களுக்கும் கெட்ட எண்ணங்களுக்கும் சதா நடந்துண்டிருக்கு.
அம்பாள்கிட்ட கெட்ட எண்ணங்கள் நெருங்காது. அதனால அவள் எப்போதும் தேவர்கள் அதாவது நல்ல எண்ணங்களுக்கே உபகாரம் செய்யரான்னு சொல்ல வந்த வாக்தேவிக்கள் அவள தேவர்களின் காரியத்துக்கு அனுகூலம் செய்யரா என்று சொல்றா.
அதனால நாமும் சதா நல்ல எண்ணங்கள வைச்சுண்டா அம்பாள் நம்ம பக்கம் இருப்பா!
கருத்துகள்
கருத்துரையிடுக