6. உத்யத்பானு ஸஹஸ்ராபா
சூரியன் உதிக்கும்போது செம்மையான நிறத்தோடு இருக்கும்கறது நமக்கு தெரியும். அதுவே ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்கோ.
முன்பே பார்த்தோம் அக்னி சிவப்பானது என்று. சூரியனும் உதிக்கும்போது சிவப்பானது.
இங்கே சிதக்னியில் அம்பாள் உதித்தாள் என்று கூறும்போது அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்த்தால் அம்பாள ஆயிரம் சூரியர்கள் உதித்தது போன்.ற பிரகாசமுடையவள்ங்க்ரா.
இப்படி நாமும் அவளை தியானம் செய்தால் நமது மனமும் இப்படி செம்மையாக சூரியன் போல் தக தக என்று ஜொலிக்கும். அப்படிபட்ட மனதில் அம்பாளின் சொரூபம் நன்கு விளங்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக