15. அஷ்டமீ சந்த்ர விப்ராஜத் அலிகஸ்தல சோபிதா
அஷ்டமி திதிங்கரது எட்டாவதா வரும் திதி. சந்திரன்/நிலா வளர்பிறையில ஒவ்வொரு தினமும் வளர்ந்து பவுர்ணமி அன்னிக்கி முழு நிலவா பிரகாசிக்கும்கரது எல்லாருக்கும் தெரியும் . எட்டாவது நாள்ல/திதியில சந்திரன் அரை வட்டமாக இருக்கும்.
அம்பாளின் நெற்றி அரைவட்டமாக இருக்கிறது, எப்படின்னா சந்திரன் எட்டாவது நாள்ல அரைவட்டமாக பிரகாசிக்கறது போல உள்ளதுங்கரா வாக்தேவிகள்.
இப்படி தியானம் செய்தா அம்பாளோட அருளால நமது மனமும் பிரகாசிக்கும்.
சந்திரன பற்றின பல நாமாக்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்துல வரது. அதுல சந்திரனுக்கும் அம்பாளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஒவ்வொன்னா விளக்கமா பார்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக