38. ரத்தின கின்கினிகா ரம்ய ரசனா தாம பூஷிதா
ரத்னம்னா எல்லாருக்கும் தெரியும். கிங்கினிகான்னா சத்தம் போடும் சலங்கைகள். தாமம்நா கயிறு. சத்தம் போடும் ரத்ன சலங்கைகள் கோர்க்கபட்ட அரை ஞாணை இடுப்பில தரிச்சின்டிருக்கா அம்பாள்.
இடுப்புக்கு கீழே தங்கம் அணிஞ்சுக்கர்து வழக்கமில்லை. ஒட்டியானம்ன்னு ஒரு ஆபரணம் இருக்கு. அதுக்கு கீழேதான் இந்த அரை ஞாண்.
நிர்விகல்பம்கர லலிதானுபூதி நிலை அடைஞ்ச ஞானிகள் நடந்து செல்லும்போது ஸப்த ஞான பூமிகள்ந்கர சலங்கையின் ஒலி கேட்கிறதுன்னு இந்த நாமாவின் உள் அர்த்தமா சொல்லலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக