7. சதுர்பாஹு ஸமன்விதா
முந்தைய நாமாவின் படி தேவர்களின் கார்யங்களை நடத்தி வைக்க வேண்டும். அதற்கு அம்பாளுக்கு கைகள் வேண்டுமே?
தேவர்களுக்கு மட்டுமல்ல, இந்த அகில உலகத்தையும் அம்பாள்தான் காப்பாத்தரா. அதனால் வாக்தேவிகள் சொல்றா, அதற்காக அம்பாளுக்கு நமக்கு உள்ளது போல் இரண்டு கைகள் போதாதாம் !
சதுர் ன்னா நாலு. பாஹுன்னா கைகள். ஸமன்விதான்னா கூடியவள்.
அதாவது அந்த அம்பாள் நான்கு கைகளோடு இருக்கா என்று சொல்லும் வாக்தேவிகள், அசுரர்களை அதாவது கெட்ட எண்ணங்களை வதைக்கவும், தேவர்களை அதாவது நல்ல எண்ணங்களை தோன்றச் செய்யவும் கைகள் மட்டும் போதாது, அதுல ஆயுதங்களும் வேண்டும், அதப் பத்தி அடுத்ததா வர நாமாக்கள்ள சொல்லப்போரா.
கருத்துகள்
கருத்துரையிடுக